Source: Yarl Network Blog

Yarl Network Blog புயலடித்துச் சாய்ந்த மரம் - காற்று

சந்திரவதனா செல்வக்குமாரன்கவிதை22/04/2002http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=215அல்லும் பகலும் மரங்களுடன் செல்லம் கொஞ்சும் தென்றல்தான் சில சமயங்களில்புயலாகி மரங்களையே சாய்த்து விடுகிறது. அந்த மரங்களையும் வயதான் பெண்களையும் ஒப்பிட்டு எனக்குள் ஒரு சிந்தனை ஓடியது. எத்தனை Â பிரபல்யங்கள் தமது மனைவியருக்கு வயதாகி விட்டால் இளம் பெண்களைத் தேடி ஓடுகிறார்கள். பிரபல்யங்கள் மட்டுந்தானா? சாதாரணமானவர்கள,; பொதுத்தொண்டு செய்கிறோம் என்று சொல்பவர்கள்.... என்று பலரும் இந்த வேலையைச் செய்கிறார்கள். அவர்களை நினைத்த போது என் மனதில் தோன்றியது இது----- புயலடித்துச் சாய்ந்த மரம் காற்றே! உனக்கும் இரண்டு முகமா........? தென்றல் என்றுதானே என்னைத் தந்தேன் இளமையின மதாளிப்புடன் நான் பசுமையாய் செழித்திருக்கையில் அல்லும் பகலும் தழுவலும் வருடலுமாய் அருகிருந்து Â என் இளமையைச் சுகித்து விட்டு எனதிந்த தள்ளாத வயதில் உன் சுயத்தைக் காட்டி விட்டாயே! கனிதரும் காலம் போய்விட்டாலும் நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே! வேரோடு சாய்த்து விட்டாயே! வீழ்ந்ததில் வேதனை இல்லை உன் நியமான புயல்முகம் கண்டதில்தான் பலமான அதிர்ச்சி. வேரறுந்ததில் சோகமில்லை நீயறுத்தாயே அதைத்தான் ஏற்காமல் மனதுக்குள் வெகுட்சி.

Read full article »
Est. Annual Revenue
$100K-5.0M
Est. Employees
1-25
CEO Avatar

CEO

Update CEO

CEO Approval Rating

- -/100